மசகு எண்ணெயை ஏற்றிய மற்றுமொரு கப்பல் எதிர்வரும் காலங்களில் நாட்டை வந்தடையவுள்ளது!

Loading… ஒரு இலட்சத்து 20 ஆயிரம் மெட்ரிக் தொன் மசகு எண்ணெயை ஏற்றிய மற்றுமொரு கப்பல் எதிர்வரும் காலங்களில் நாட்டை வந்தடையவுள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சரான காஞ்சன விஜேசேகர இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். Loading… இதற்கமைய, சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தினை இன்னும் 40 நாட்களுக்கு முழு கொள்ளளவுடன் இயங்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். Loading…